Friday, August 13, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 1

உரத்த சிந்தனைகள் மூலமாக சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதினேன்.அதன் விளைவு தான் இந்த பதிவு .வியப்பு
தரும் சில தகவலகள் இதோ :

1. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம் ( பல்பு ஏன் கண்டுபிடிச்சார் என்று இப்ப புரியுது )

2 . யானை கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Elephant herd என்பது போல ஆந்தை கூட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் parliment (சரி தான் )

3 . நீதி போதனை குரங்குகளின் பெயர் தெரியுமா? தீயவை பார்க்காதே குரங்கின் பெயர் Mizaru தீயவை கேட்காதே  குரங்கின் பெயர் Mikazaru தீயவை பேசாதே  குரங்கின் பெயர் Mazaru (பெயர்களை பார்த்தால் நம்ம ஊர் குரங்குகள் போல தெரியவில்லை )
 
4.யானைக்கு மட்டும் மற்ற விலங்குகள் போல தாவ முடியாதாம் (நல்ல வேளை).


5. நான்கு மூட்டுகள் உள்ள ஒரே விலங்கினம் யானை. (அவ்வளவு பெரிய எடையை தாங்க வேண்டாமா ! ஆனால் மூட்டு வலியும் இரட்டிப்பாக இருக்குமே ?)
 
6. கடந்த 10 000 ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டு மேலயும் போர் தொடுக்க வில்லையாம்.( ஹூம் ! சீனாவும் பாகிஸ்தானும் நம் மேல் போர் தொடுக்காமல் இருந்தால் பத்தாது !)


7. நீர்யானையால் மனிதனை விட வேகமாக ஒடமுடியுமாம்(வேண்டாம் இந்த விளையாட்டு).
 
8. ஒரு நிறத்தை சொல்ல சொன்னால் ஐந்தில் மூன்று நபர்கள் சிவப்பு என்று சொல்வார்களாம்.(கம்யுனிஸ்டுகள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் )


9. ரஷ்ய கம்யுனிச தலைவர் காரல் மார்க்ஸ் தன வாழ்க்கையில் ஒரு நாள் கூட ரஷியாவிற்கு சென்றதில்லயாம்.அவர் பிறந்தது ஜெர்மனியில்
வாழ்ந்தது பிரான்சிலும் இங்கிலாந்திலும் .

10. உலகத்தில் மிக அதிகமாக உள்ள பெயர் என்ன தெரியுமா? முகமத்

         வியப்புகள் இன்னும் தொடரும் ....

No comments:

Post a Comment