Thursday, August 26, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 5

1.நம் வீட்டில் வலம் வரும் ஈ போடும் அடிநாதம் middle Octave key F

2.இரண்டு கி.மீ தொலைவில் உள்ள வாசனையை கூட ஈயினால் நுகர          முடியும்

3.புத்திசாலிகளின் தலை முடியில் அதிக அளவில் zinc மற்றும் copper இருக்கும் என்று சொல்லபடுகிறது

4.இஸ்தான்புள் தான் உலகிலயே இரண்டு கண்டங்களில் இருக்கும் நகரம் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்

5.எறும்புக்கு பதினைந்து நாட்கள் வரை நீருக்கு அடியில் இருக்கும் திறன் உண்டு

6.ஜப்பானில் தர்பூஸ் பழங்கள் சதுர வடிவில் உள்ளதாம் .அவை அடுக்கி வைப்பதற்கு மிகவும் எளிதாக இருக்குமாம்

7.பசுவினால் மாடி படிகள் ஏற முடியுமாம் .ஆனால் இறங்க முடியாதம்.

8.குட்டி ஒட்டக சிவிங்கி பிறக்கும் போது ஆறு அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாம்

9.உலகிலயே அதிகமாக திருடப்படும் நூல் பைபிள் தானாம்

10.மைக்ரோவேவ் அவனில் திராட்சை வைத்தால் வெடிக்குமாம்

Thursday, August 19, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி - 4

1.ஆப்பிள் விதையில் சயனைடு உள்ளது.



2. கிரீம் பாலை விட மெலிதானது .


3.அமெரிக்கா ஜப்பான் தவிர முற்றிலுமாக உள்ளூர் உதிரிபாகங்களை கொண்டு சூப்பர் கம்ப்யுட்டர் தயாரித்துள்ள ஒரே நாடு இந்தியா தான்.

4.உலகிலயே அதிகமான நபர்களால் உடனடியாக முகரவுணர்வு செய்யப்பட்ட வாசனை என்ன தெரியுமா ? - காபி வாசனை.

5.உலகிலயே அதிகமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ள நபர்கள் உள்ள நாடு எது தெரியுமா ? - இந்தியா தான்
 
6.மனிதர்களுக்கு கைரேகை எப்படி தனித்தன்மை வாய்ந்ததோ அதே போல் நாய்களுக்குஅதன் மூக்கின் மேல் உள்ள ரேகை தனிதன்மை வாய்ந்தது.அதை வைத்து நாய்களை மிக சரியாக அடையாளம் காணலாம்.

7.நல்ல உடல் நலம் உள்ள நாயின் சராசரி இதய துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 120 .இது மனிதர்களை விட 50 % அதிகம் .

8.நாய்களுக்கு கூடுதலாக நாக்கு மூலமாகவும் மூச்சு விடும் திறன் உள்ளது.

9.நாய்களின் கேட்கும் திறன் மிக அதிகம் . சுமார் 35000 vibration per second வரை நாய்களால் கேட்க முடியும்.

10.நாம்  தும்மல் போடும்போது இதயம் ஒரு வினாடி நின்று விட்டு மீண்டும் இயங்குகிறது.

Tuesday, August 17, 2010

உங்களக்கு தெரியுமா - பகுதி 3

1.சீன தலைவர் மாவோ சே துங் பல் துலக்கினதே இல்லையாம்.ஏன் என்று கேட்டால் புலிகள் என்றைகாவது பல் துலக்கியதுண்டா என்று கேட்பாராம்!

2.உலகத்திலயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியா தானாம்.

3.ஒருவர் பலரை மணந்து கொள்வது உலகிலயே அதிக அளவில் காணபடுவது மாலைதீவில் தானாம்.

4. நார்வேயில் ஒரு நகரத்தின் பெயர் A , ஜப்பானில் ஒரு நகரத்தின் பெயர்  O , பிரான்சில் ஒரு நகரத்தின் பெயர் Y

5.கோகோ கோலா முதன் முதலில் தயாரிக்கப்பட்ட போது அதன் நிறம் என்ன தெயர்யுமா -பச்சை
 
6. போலார் கரடிகள் இடது கை பழக்கம் உடையவை

7. எஸ்கிமோக்கள் சூதாடுவதில்லை

8.குழந்தைகளுக்கு  இருக்கும் எலும்புகளின்எண்ணிக்கை  300.வயதானவர்களுக்கு இருக்கும் எலும்பு எண்ணிக்கை 206

9. மூன்று மாதம் வரை குழந்தைகள் அழும் பொது கண்ணீர் சுரப்பதில்லை.

10. பாலைவனம் இல்லாத ஒரே கண்டம் -ஐரோப்பா மட்டும் தான்

Sunday, August 15, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி -2

1.தலையை திருப்பாமல் பின்புறம் பார்க்கும் திறன் உள்ள இரண்டு விலங்குகள் முயலும் கிளியும் மட்டுமே.

2 .பின்னோக்கி பறக்க கூடிய ஒரே பறவை ஹம்மிங் பேர்ட் மட்டுமே.

3.ஆங்கிலத்தில் 'Jiffy' என்று சொல்ல கூடிய அளவுகோல் ஒரு வினாடியின்   நூறில் ஒரு பங்கு.

4 .ஒட்டகச்சிவங்கி 21 இஞ்சு நீளமுள்ள நாக்கினால் தனது காதுகளை சுத்தம் செய்யுமாம்.

5 .உலகில் உள்ள காடுகளில் 25 % சைபீரியாவில் உள்ளது.
 
6 . பாப்பா நியு கினியா என்ற சிறிய நாட்டில் அதிக பட்சமாக 800 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள்.

7 .பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்த நாடு நியுசிலாந்து - ஆண்டு -1893

8 .ஆஸ்ரேலியாவில் மொத்த மக்கட் தொகையை விட இரண்டு மடங்கு  அதிகம் கங்காருக்கள் உள்ளது.

9 .நெப்போலியன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்காக 1500 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தாராம்.1984 ஆம் ஆண்டு வரை பெல்ஜியத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை இந்த பட்டியலில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டுமாம்.

10 .சவூதி அரேபியாவில் நதிகளே கிடையாதாம்.

Friday, August 13, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 1

உரத்த சிந்தனைகள் மூலமாக சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதினேன்.அதன் விளைவு தான் இந்த பதிவு .வியப்பு
தரும் சில தகவலகள் இதோ :

1. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம் ( பல்பு ஏன் கண்டுபிடிச்சார் என்று இப்ப புரியுது )

2 . யானை கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Elephant herd என்பது போல ஆந்தை கூட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் parliment (சரி தான் )

3 . நீதி போதனை குரங்குகளின் பெயர் தெரியுமா? தீயவை பார்க்காதே குரங்கின் பெயர் Mizaru தீயவை கேட்காதே  குரங்கின் பெயர் Mikazaru தீயவை பேசாதே  குரங்கின் பெயர் Mazaru (பெயர்களை பார்த்தால் நம்ம ஊர் குரங்குகள் போல தெரியவில்லை )
 
4.யானைக்கு மட்டும் மற்ற விலங்குகள் போல தாவ முடியாதாம் (நல்ல வேளை).


5. நான்கு மூட்டுகள் உள்ள ஒரே விலங்கினம் யானை. (அவ்வளவு பெரிய எடையை தாங்க வேண்டாமா ! ஆனால் மூட்டு வலியும் இரட்டிப்பாக இருக்குமே ?)
 
6. கடந்த 10 000 ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டு மேலயும் போர் தொடுக்க வில்லையாம்.( ஹூம் ! சீனாவும் பாகிஸ்தானும் நம் மேல் போர் தொடுக்காமல் இருந்தால் பத்தாது !)


7. நீர்யானையால் மனிதனை விட வேகமாக ஒடமுடியுமாம்(வேண்டாம் இந்த விளையாட்டு).
 
8. ஒரு நிறத்தை சொல்ல சொன்னால் ஐந்தில் மூன்று நபர்கள் சிவப்பு என்று சொல்வார்களாம்.(கம்யுனிஸ்டுகள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் )


9. ரஷ்ய கம்யுனிச தலைவர் காரல் மார்க்ஸ் தன வாழ்க்கையில் ஒரு நாள் கூட ரஷியாவிற்கு சென்றதில்லயாம்.அவர் பிறந்தது ஜெர்மனியில்
வாழ்ந்தது பிரான்சிலும் இங்கிலாந்திலும் .

10. உலகத்தில் மிக அதிகமாக உள்ள பெயர் என்ன தெரியுமா? முகமத்

         வியப்புகள் இன்னும் தொடரும் ....