Friday, February 20, 2009

உலக தாய் மொழி தினம் - Feb 21

ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் பண்பாட்டு கழகம் feb 21 ஐ 'உலக தாய் மொழி தினமாக' அறிவித்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. உலக அளவில் அனைவரும் தாய்மொழி தினத்தில் அவரவர் மொழி வளர்ச்சிக்கும்,வளம் பெறுவதற்கும் மொழி ஆர்வத்துடன் தொடர்ந்து பணி செய்ய உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.நான் ஆங்கிலம்,தமிழ் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் எனது பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறேன். ஏதாவது ஒரு மொழியில் எழுதிய இடுக்கையை குறித்த விடயத்தை மீண்டும் எனது மற்ற இரண்டு மொழி பதிவுகளில் நான் எழுதுவதில்லை . உலக தாய் மொழி குறித்து, தாய் மொழி தமிழில் வலை பதிவு இடுக்கை எழுத வேண்டும் என்பதினாலயே இந்த பதிவினை ஆங்கிலம் தவிர தாய் மொழி தமிழிலும் பதிவு செய்து உள்ளேன்.தாய் மொழியை பேணி காக்காத காரணத்தினால், இன்று உலகில் பல மொழிகள் வழக்கில் இல்லாமல் மறைந்து போய் விட்டது.உலகில் உள்ள 7000 மொழிகளில் சுமார் 2500 மொழிகள் வழக்கழியும் அபாயத்தில் உள்ளதாக யுனெஸ்கோ மன்றம் கூறுகிறது.தேவைக்கு ஏற்ப மட்டும் தாய் மொழி தவிர்த்து, பிற மொழிகளில் உரையாடுவதும், எழுதுவதும் தொடர்ந்து செய்து வந்தால் அவரவர் தாய் மொழியை அழியும் அபாயத்தில் இருந்து காப்பாற்ற முடியும். நான் இப்படி சொல்வதை யாரும் மொழி வெறி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லோருக்கும் அவரவர் மொழி குறித்து பற்று கட்டாயம் இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் சிறந்த மொழிகளே, தாய் மொழி தினம் கொண்டாடுவதின் நோக்கமே, உலகில் வழக்கில் உள்ள எல்லா மொழிகளும் பல்லாண்டு தொடர்ந்து நீடிக்க வேண்டும்,வளர வேண்டும், அந்த மொழியின் கலாசாரம், பண்பாடு அழியாமல் பாதுகாக்க பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான்.யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கை படி இந்தியாவில் சுமார் 196 மொழிகள் அழியும் அபாய நிலையில் உள்ளது. நமக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 192 மொழியும் ,இந்தோனேஷியாவில் 142 மொழியும் வழக்கழியும் நிலையில் உள்ளது.மொழி பேசுவர்களின் எண்ணிக்கை குறைவது,இளையவர்கள் தாய் மொழி பயிலாமல் இருப்பது,மொழி அறிந்தவர்களின் சராசாரி வயது அதிகமாக இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. எனவே தாய் மொழியை பேணி காப்பாற்றுங்கள்.தாய் மொழி நம் எண்ணமெல்லாம் நிறைந்து இருந்தால் என்றும் அழிவில்லை.

No comments:

Post a Comment