Tuesday, February 17, 2009

நான் கடவுள் விமரிசனம்

பாலாவின் 'நான் கடவுள்' வழகத்திற்கு மாறான ஒரு திரைப்படம்.இந்த காலத்தில் இதுபோன்ற ஒரு திரை படம் எடுக்க எத்தனை இயக்குனர்களுக்கு துணிவு இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.பாலாவிற்கு தன் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கையின் வெளிப்பாடு தான் 'நான் கடவுள்' என்று நான் நினைக்கிறேன்.விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' நாவல் தான் படத்தின் மூல கதை என்று சொல்கிறார்கள். அந்த நாவலை நான் படித்ததில்லை.நாவலில் அகோரி ருத்திரன் போன்ற ஒரு கதாபாத்திரம் உண்டா என்றும் தெரியவில்லை. நமக்கு தெரிந்தவரை அகோரிகள் காசியில் வாழும் சாதுக்கள். பொதுவாக மக்கள் ஒரு வித மிரட்சியுடன்யே இது வரை அகோரிகளை பார்த்துள்ளார்கள். அதற்க்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறை. அகோரிகள் வாழ்வது மயானத்தில். பெரும்பாலும் நிர்வாணமாகவே திரிவார்கள்.சிலர், பிணங்கள் மேல் சார்த்தப்படும் உடைகளை அணிவர்.இன்னும் சிலர் கோவணத்துடன் திரிவார்கள்.மயானத்தில் உள்ள சாம்பலை அள்ளி உடல் முழவதும் உடை போல் பூசி கொள்வார்கள்.பிணங்கள் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார்கள்.போதை வஸ்துக்களை பயன்படுத்துவார்கள். பிணங்களை அகோரிகள் உணவாக தின்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.இது போன்ற அகோரிகளை ஒரு வித் பீதியுடனயே சாதாரண மக்கள் இது நாள் வரை பார்த்து வந்துள்ளார். 'நான் கடவுள்' திரைப்படம் அகோரிகள் மேல் உள்ள இந்த எண்ணத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். துஷ்டர்களையும் அழிக்கவும் அநீதியை எதிர்க்கவும் உலகில் அவதாரம் எடுத்த சாதுக்கள் தான் இந்த அகோரிகள் என்று ஒரு வித எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அந்த அளவுக்கு எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ருத்திரன் தன்னை கால பைரவன் என்று சொல்லி கொள்கிறான். கால பைரவன் சிவனின் ஒரு அவதாரம்.ருத்ரனாக ஆர்யா மிக சிறப்பாகவே வாழுந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.ஆர்யாவின் 'பாடி லாங்க்வேஜ்' மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு படத்தில் மிக குறைவான அளவு வசனங்களே உள்ளது. இருந்தும் கரகரத்த குரலில் பேசியும்,பார்வையில் உக்கிரத்தை காட்டியும், சண்டை காட்சிகளில் ஆக்ரோசத்தை காட்டியும், தலை கீழாக நின்று யோகாசங்களை செய்தும் அகோரி ருதிரனாகவே மாறிவிடுகிறார். அவரது திரைப்பட வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை படம் என்றே சொல்லலாம்.படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இசைஞானியின் இசையும் பின்னணி இசையும் தான். sound effects க்கு படம் முழுவதும் தனி கவனம் எடுத்துள்ளது நன்றாக தெரிகிறது. அனைத்து effects உம் இயற்கையாகவே உள்ளது.குறிப்பாக சண்டை காட்சிகளின் effects தரம் வாய்ந்தவை. ஓம் சிவோகம் மற்றும் பிட்சை பாத்திரம் பாடல்கள் மிகவும் இனிமையானவை.இதில் 'பிட்சை பாத்திரம்' பாடல் இசைஞானியின் 'ரமணமாலை' குறுந்தகடில் இருந்து எடுத்து திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை இயற்றியவரும் இசைஞானி தான். பாடல் வரிகள் பெரிய தத்துவங்களையே உதிர்க்கின்றன. பிட்சைகாரர்களின் சோகமான வாழ்க்கைக்கு நடுவே இருக்கும் மெல்லிய நகைச்சுவ உணர்வு மிக பிரமாதமாக காட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிழல் உலகம் இருப்பது சமீபத்தில் தான் 'slumdog millionaire' திரைப்படத்தில் பார்த்தோம்.இது இன்னொரு வகை(தென்னிந்திய வகை) அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் பூஜா. மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் இது ஒரு milestone movie என்றே சொல்லவேண்டும்.திரை படத்திற்காக சில compromise களையும் பாலா செய்துள்ளார். காவல் நிலைய பாடல் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன். தனியாக காமெடி ட்ராக் இல்லாததால் பிதாமகன் பாணியில் இந்த பாடலை வைத்துள்ளார் போலும். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மிக சிறப்பான stunt choreography . இது போல மிகவும் இயற்கையாக சண்டை காட்சிகளை யாரும் இதுவரை படமாகியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.பாலா ஒரு perfectionist என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இந்த படத்திற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துகொண்டார் என்று நினைக்கும் பொழுது அவரது திறமைக்கு அது சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. இந்த நீண்ட இடைவெளியினால் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் உண்மை தான். காசியில் எடுத்துள்ள அகோரிகளின் வாழ்க்கை ஒரு சிறந்த் டாக்குமெண்டரி படம் பார்ப்பது போல உள்ளது. கதை தென் தமிழ் நாட்டுக்கு மாறும் பொழுது சற்று சினிமாத்தனம் கதையில் நுழைந்து விடுகிறது.மற்ற இயக்குனர்களில் இருந்து வித்தியாசமாக படம் எடுக்க கூடியவர் பாலா என்பது இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.slumdog போலவே இதுவும் மற்றொரு underdog பற்றிய திரைப்படம். Every dog has its day.

No comments:

Post a Comment