ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் பண்பாட்டு கழகம் feb 21 ஐ 'உலக தாய் மொழி தினமாக' அறிவித்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. உலக அளவில் அனைவரும் தாய்மொழி தினத்தில் அவரவர் மொழி வளர்ச்சிக்கும்,வளம் பெறுவதற்கும் மொழி ஆர்வத்துடன் தொடர்ந்து பணி செய்ய உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.நான் ஆங்கிலம்,தமிழ் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் எனது பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறேன். ஏதாவது ஒரு மொழியில் எழுதிய இடுக்கையை குறித்த விடயத்தை மீண்டும் எனது மற்ற இரண்டு மொழி பதிவுகளில் நான் எழுதுவதில்லை . உலக தாய் மொழி குறித்து, தாய் மொழி தமிழில் வலை பதிவு இடுக்கை எழுத வேண்டும் என்பதினாலயே இந்த பதிவினை ஆங்கிலம் தவிர தாய் மொழி தமிழிலும் பதிவு செய்து உள்ளேன்.தாய் மொழியை பேணி காக்காத காரணத்தினால், இன்று உலகில் பல மொழிகள் வழக்கில் இல்லாமல் மறைந்து போய் விட்டது.உலகில் உள்ள 7000 மொழிகளில் சுமார் 2500 மொழிகள் வழக்கழியும் அபாயத்தில் உள்ளதாக யுனெஸ்கோ மன்றம் கூறுகிறது.தேவைக்கு ஏற்ப மட்டும் தாய் மொழி தவிர்த்து, பிற மொழிகளில் உரையாடுவதும், எழுதுவதும் தொடர்ந்து செய்து வந்தால் அவரவர் தாய் மொழியை அழியும் அபாயத்தில் இருந்து காப்பாற்ற முடியும். நான் இப்படி சொல்வதை யாரும் மொழி வெறி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லோருக்கும் அவரவர் மொழி குறித்து பற்று கட்டாயம் இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் சிறந்த மொழிகளே, தாய் மொழி தினம் கொண்டாடுவதின் நோக்கமே, உலகில் வழக்கில் உள்ள எல்லா மொழிகளும் பல்லாண்டு தொடர்ந்து நீடிக்க வேண்டும்,வளர வேண்டும், அந்த மொழியின் கலாசாரம், பண்பாடு அழியாமல் பாதுகாக்க பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான்.யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கை படி இந்தியாவில் சுமார் 196 மொழிகள் அழியும் அபாய நிலையில் உள்ளது. நமக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 192 மொழியும் ,இந்தோனேஷியாவில் 142 மொழியும் வழக்கழியும் நிலையில் உள்ளது.மொழி பேசுவர்களின் எண்ணிக்கை குறைவது,இளையவர்கள் தாய் மொழி பயிலாமல் இருப்பது,மொழி அறிந்தவர்களின் சராசாரி வயது அதிகமாக இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. எனவே தாய் மொழியை பேணி காப்பாற்றுங்கள்.தாய் மொழி நம் எண்ணமெல்லாம் நிறைந்து இருந்தால் என்றும் அழிவில்லை.
பாலாவின் 'நான் கடவுள்' வழகத்திற்கு மாறான ஒரு திரைப்படம்.இந்த காலத்தில் இதுபோன்ற ஒரு திரை படம் எடுக்க எத்தனை இயக்குனர்களுக்கு துணிவு இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.பாலாவிற்கு தன் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கையின் வெளிப்பாடு தான் 'நான் கடவுள்' என்று நான் நினைக்கிறேன்.விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' நாவல் தான் படத்தின் மூல கதை என்று சொல்கிறார்கள். அந்த நாவலை நான் படித்ததில்லை.நாவலில் அகோரி ருத்திரன் போன்ற ஒரு கதாபாத்திரம் உண்டா என்றும் தெரியவில்லை. நமக்கு தெரிந்தவரை அகோரிகள் காசியில் வாழும் சாதுக்கள். பொதுவாக மக்கள் ஒரு வித மிரட்சியுடன்யே இது வரை அகோரிகளை பார்த்துள்ளார்கள். அதற்க்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறை. அகோரிகள் வாழ்வது மயானத்தில். பெரும்பாலும் நிர்வாணமாகவே திரிவார்கள்.சிலர், பிணங்கள் மேல் சார்த்தப்படும் உடைகளை அணிவர்.இன்னும் சிலர் கோவணத்துடன் திரிவார்கள்.மயானத்தில் உள்ள சாம்பலை அள்ளி உடல் முழவதும் உடை போல் பூசி கொள்வார்கள்.பிணங்கள் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார்கள்.போதை வஸ்துக்களை பயன்படுத்துவார்கள். பிணங்களை அகோரிகள் உணவாக தின்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.இது போன்ற அகோரிகளை ஒரு வித் பீதியுடனயே சாதாரண மக்கள் இது நாள் வரை பார்த்து வந்துள்ளார். 'நான் கடவுள்' திரைப்படம் அகோரிகள் மேல் உள்ள இந்த எண்ணத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். துஷ்டர்களையும் அழிக்கவும் அநீதியை எதிர்க்கவும் உலகில் அவதாரம் எடுத்த சாதுக்கள் தான் இந்த அகோரிகள் என்று ஒரு வித எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அந்த அளவுக்கு எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ருத்திரன் தன்னை கால பைரவன் என்று சொல்லி கொள்கிறான். கால பைரவன் சிவனின் ஒரு அவதாரம்.ருத்ரனாக ஆர்யா மிக சிறப்பாகவே வாழுந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.ஆர்யாவின் 'பாடி லாங்க்வேஜ்' மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு படத்தில் மிக குறைவான அளவு வசனங்களே உள்ளது. இருந்தும் கரகரத்த குரலில் பேசியும்,பார்வையில் உக்கிரத்தை காட்டியும், சண்டை காட்சிகளில் ஆக்ரோசத்தை காட்டியும், தலை கீழாக நின்று யோகாசங்களை செய்தும் அகோரி ருதிரனாகவே மாறிவிடுகிறார். அவரது திரைப்பட வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை படம் என்றே சொல்லலாம்.படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இசைஞானியின் இசையும் பின்னணி இசையும் தான். sound effects க்கு படம் முழுவதும் தனி கவனம் எடுத்துள்ளது நன்றாக தெரிகிறது. அனைத்து effects உம் இயற்கையாகவே உள்ளது.குறிப்பாக சண்டை காட்சிகளின் effects தரம் வாய்ந்தவை. ஓம் சிவோகம் மற்றும் பிட்சை பாத்திரம் பாடல்கள் மிகவும் இனிமையானவை.இதில் 'பிட்சை பாத்திரம்' பாடல் இசைஞானியின் 'ரமணமாலை' குறுந்தகடில் இருந்து எடுத்து திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை இயற்றியவரும் இசைஞானி தான். பாடல் வரிகள் பெரிய தத்துவங்களையே உதிர்க்கின்றன. பிட்சைகாரர்களின் சோகமான வாழ்க்கைக்கு நடுவே இருக்கும் மெல்லிய நகைச்சுவ உணர்வு மிக பிரமாதமாக காட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிழல் உலகம் இருப்பது சமீபத்தில் தான் 'slumdog millionaire' திரைப்படத்தில் பார்த்தோம்.இது இன்னொரு வகை(தென்னிந்திய வகை) அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் பூஜா. மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் இது ஒரு milestone movie என்றே சொல்லவேண்டும்.திரை படத்திற்காக சில compromise களையும் பாலா செய்துள்ளார். காவல் நிலைய பாடல் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன். தனியாக காமெடி ட்ராக் இல்லாததால் பிதாமகன் பாணியில் இந்த பாடலை வைத்துள்ளார் போலும். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மிக சிறப்பான stunt choreography . இது போல மிகவும் இயற்கையாக சண்டை காட்சிகளை யாரும் இதுவரை படமாகியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.பாலா ஒரு perfectionist என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இந்த படத்திற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துகொண்டார் என்று நினைக்கும் பொழுது அவரது திறமைக்கு அது சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. இந்த நீண்ட இடைவெளியினால் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் உண்மை தான். காசியில் எடுத்துள்ள அகோரிகளின் வாழ்க்கை ஒரு சிறந்த் டாக்குமெண்டரி படம் பார்ப்பது போல உள்ளது. கதை தென் தமிழ் நாட்டுக்கு மாறும் பொழுது சற்று சினிமாத்தனம் கதையில் நுழைந்து விடுகிறது.மற்ற இயக்குனர்களில் இருந்து வித்தியாசமாக படம் எடுக்க கூடியவர் பாலா என்பது இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.slumdog போலவே இதுவும் மற்றொரு underdog பற்றிய திரைப்படம். Every dog has its day.
Fostera என்பது Fostering Technologies in Rural Areas என்பதன் சுருக்கம். போச்டீரா கிராமங்களில் BPO,Call Centre போன்றவைகளை அமைத்து கிராமத்து இளைஞ்சர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.இதில் என்ன சிறப்பு என்றால் இது ஒரு அரசு நிறுவனம்.ELCOT என்ற அரசு நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் பங்களிப்புடன் இந்தியாவிலயே முதன்முதலாக மிகவும் பின் தங்கிய கிராமம் ஆன சனசந்திரம் என்ற இடத்தில் தனது சேவையை துடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது.ஆங்கில அறிவு அதிகம் இல்லாத, குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ள கிராமத்து இளைஞ்சர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து call centre வேலை வாய்ப்பு அளித்துள்ளார்கள்.பல பன்னாட்டு நிறுவங்களும் வங்கிகளும் இவர்களின் சேவையை நாடி வருகிறார்கள் தற்பொழுது.வெறும் பள்ளி கல்வியுடன் படிப்பை முடித்த பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு அவர்களின் கிராமத்திலயே இந்த அமைப்பு வழங்கியுள்ளது.கிராம முன்னேற்றம் குறித்து பலரும் வாய் கிழிய பேசி வரும் வேளையில் சத்தமின்றி ஒரு புரட்சியை செய்து முடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள் Fostera அமைப்பினர்.சேவையை விரிவுபடுத்த இன்னும் பலருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.நாட்டிற்கே இது ஒரு முன் மாதிரி . இவர்களுக்கு பயிற்சி அளித்த Microsoft India அதிகாரி கிராமத்து இளைஞ்சர்களின் புரிந்து கொள்ளும் திறனை பார்த்து வியந்துள்ளார். கிருஷ்ணகிரியை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலும் Fostera விரிவுபடுத்த உள்ளது.தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டமும் தஞ்சையை பின் பற்ற முடிவு செய்துள்ளது.சென்னையை சேர்ந்த Adventity என்ற கணினி துறையை சேர்ந்த நிறுவனம் Fostera வுடன் இணைந்து பல உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.மிக பெரிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் Fostera விற்கு பணிகள் குடுப்பதற்கு முன் வந்துள்ளது மிகவும் ஆரோகியமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் data management உம் இந்த அமைப்பு செய்கிறது.தவிர மும்பை மற்றும் புனே போன்ற பெரு நகரங்களில் உள்ள aviation industry சம்பந்தப்பட்ட வேலைகளையும் இவர்கள் செய்கிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டதிலயே இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் மேலும் சேவையை விரிவுபடுத்த உள்ளார்கள். இந்தியாவின் மிக பெரிய IT நிறுவனங்களின் அதிகாரிகள் நிறைந்த ஒரு Naascom குழு Fostera வின் செயல்பாடுகளை சென்று பார்த்து வியப்படைந்து பாராட்டியுள்ளார்கள்.இதை ஒரு முன்னோடியாக எடுத்து கொண்டு நாட்டின் பல கிராமங்களிலும் இது தொடர வாய்ப்பிருக்கிறது.நமது அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைத்து அரசியலாக்காமல் இருந்தால் IT மிகவும் வேகமாக கிராமங்களை சென்றடையும்.