Saturday, October 4, 2008

வருங்காலம் எப்படி இருக்கும்?

ரே கர்சவீல்(Ray Kurzweil) என்பவர் இன்றைய உலகில் எடிசனுக்கு இணையாக கருதப்படுபவர்.கணினி வந்த பின்பு நமது வாழ்க்கையில் பல விடயங்கள் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.சர்வம் கணினி மயம் என்றாகிவிட்டது.இவர் பல விடயங்களை குறித்து கணிப்புகள் கூறியுள்ளார். அதிலொன்று 2025 ஆம் ஆண்டு மனித மூளைக்கு நிகரான செயல் திறன் உள்ள கணினி உருவாக்கப்படும் என்பது தான்.2030 இல் மனித மூளைய விட ஆயிரம் மடங்கு வேகமும் திறனும் உள்ள கணினிகள் தயாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.இதற்க்கு மேலும் கூறுகிறார்.2045 களில் உருவாக்கப்படும் கணினிகள் மனித மூளை திறனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மேம்பட்டு இருக்கும் என்கிறார்.இந்த நிலைமை எட்டும் காலத்தை அவர் "Point of Singularity" என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்.இவை எல்லாம் நடக்காது என்று யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது.நடப்பதற்கு சாத்தியகூறுகள் மிக மிக அதிகம்.ஆனால் நான் நினைப்பது ,இவ்வை எல்லாம் நடப்பதற்கு முன்பே உலகில் க்ளோனிங்க் மூலம் குழந்தைகளை உருவாக்க சட்டரீதியாகவே எதோ ஒரு நாட்டில் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறேன்.கடந்த ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் ,நமது அன்றாட வாழ்கையிலேயே என்னவெல்லாமோ மாற்றங்கள் வந்துவிட்டது.

No comments:

Post a Comment