Friday, August 22, 2008

வலைப்பதிவில் கவர்ந்தது

சமீபத்தில் படித்த தமிழ் வலை பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த இந்த பதிவை கீழே தந்துள்ளேன். ஒவ்வொரு தமிழாக்கத்தையும் நான் மிகவும் ரசித்தேன். ( நன்றி அப்துல் மாலிக்,முத்துபேட்டை நண்பர்களின் வலைப்பதிவு )

"பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் எப்படி அழைத்திருப்பார்கள். என்று பார்போம்
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
windows = ஜன்னல்

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
- ரசிகவ் ஞானியார் "

Saturday, August 16, 2008

காஷ்மீரும் அமர்நாத் பிரச்னையும்

சில நாட்களாக காஷ்மீரில் நடக்கும் கலவரங்களும் போராட்டங்களும் மிகுந்த மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா தனது 61 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் காஷ்மீரி சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் லாபம் தேட நினைக்கும் அரசியல் கட்சிகளே இதற்க்கு முக்கிய காரணம். பொதுமக்கள் இதை புரிந்து கொள்ளும் நாள் என்று தான் வருமோ? .இதை ஆரம்பித்து வைத்த அரசியல் கட்சிகளுக்கே இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலவரம்.கலவரத்தில் ஈடுபடும் இரண்டு சமுதாய நண்பர்களும் முக்கியமான சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் முக்கியம். இரு சமுதாய மக்கிளிடையே நிலவி வந்த நல்லெண்ணத்தினால் உருவான ஒரு ஆலயம் தான் இந்த அமர்நாத் ஆலயம்.சரித்திர சான்றுகள் படி காஷ்மீர் ஒரு பெரிய நீர் தேக்கம் ஆக இருந்திருக்கிறது. காஷ்யப ராய் என்பவர் இந்த நீரை வெளியேற்றிய போது அமர்நாத் குகையும் லிங்கமும் தெரிந்ததாக கூறப்படுகிறது.பின்னர் பெர்கிஷ் ரேஷி என்பவர் ஹிமாலயத்திற்கு செல்லும் போது மீண்டும் இந்த குகையும் லிங்கத்தையும் கண்டிருக்கிறார்.மற்றுமொரு முறை பூட்டா மாலிக்கு என்ற முஸ்லீம் இடைய சிறுவனுக்கு ஒரு முனிவர் ஹிமாலயத்தில் வைத்து ஒரு சாக்கு மூட்டை நிறைய கரி கட்டைகளை கொடுக்கிறார். வீட்டுக்கு வந்த சிறுவன் மூட்டையை திறந்த போது மூடை முழுவதும் தங்கமாக இருந்திருக்கிறது.சந்தோஷத்தில் முனிவரை பார்க்க மீண்டும் அந்த இடத்திற்கு செல்கிறான் அந்த சிறுவன். அங்கு அந்த முனிவர் இல்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு குகையும் லிங்கமும் தென்படுகிறது.அன்று முதல் அமர்நாத் ஹிந்துக்களின் புண்ணிய ஸ்தலம் ஆக மாறுகிறது. மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ,இன்று வரை அமர்நாத் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை வருமானத்தில் இருந்தது ஒரு பங்கு அந்த முஸ்லீம் சிறுவனின் வழி தோன்றல்களுக்கு அளிக்கப்படுகிறது.மீதம் உள்ள பணத்தை மட்டுமே கோவில் அறகட்டளை எடுத்து கொள்கிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தே பனி லிங்கம் தரிசிக்க பட்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளது.நமக்கு தெரிந்து பாடல் பெற்ற ஸ்தலம் தான் அமர்நாத்.
இது மட்டுமல்ல ,காலம் காலமாக அமர்நாத் யாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் , காஷ்மிரீ முஸ்லீம்கள் அன்னதானம் செய்து வந்திருக்கிறார்கள்.இன்றும் செய்கிறார்கள்.இரு சமுதாயத்தினரிடையே உள்ள நல்லெண்ணத்திற்கு இதுவே சான்று.இப்படி இருக்கையில் அரசாங்கத்தால் அமரநாத் ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா ? இது அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் செய்த சூழ்ச்சி.அதே அரசாங்கம் நிலம் அளித்ததை திரும்ப பெற்ற பின்னும் போராட்டங்கள் நடைபெறுவது எதை காட்டுகிறது? அமைதியை விரும்பும் பொதுமக்கள் என்று தான் இதை எல்லாம் புரிந்து கொள்வார்களோ? இன்று நடக்கும் போராட்டம் நிலம் அளித்ததை எதிர்த்து அல்ல. அந்த பெயரில் ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடருகிறது.வழக்கம் போல ஆடு நனைந்தால் ஓநாய் வருத்தப்படுவது போல நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த சாக்கில் குளிர் காய நினைக்கிறது.அதிபர் முஷாரப்க்கு இருக்கும் உள்ளூர் நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமர்நாத் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறார்.இதை நாம் அனுமதிக்கலாமா? அரசியல் மாட்சியங்களை மறந்து ,நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக சம்பந்தபட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடாமல் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் .

Thursday, August 7, 2008

மறந்து போன திறன்கள்

சமீபத்தில் படித்த ஒரு பத்த்ரிகை செய்தி -ஆஸ்த்ரேலியாவில் குழந்தைகளின் கையெழுத்து கோணல் மாணலாக இருக்கிறது என்று அவர்களின் கையை பிடித்து எழுத சொல்லி கொடுக்கிறார்களாம். இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?
கம்ப்யூட்டர் ,லேப்டாப், மொபைல் போன் பயன்படுத்தி அவர்களுக்கு எழுத மறந்து போய்விட்டதாம். இது நமது நகரத்து குழைந்தளுக்கும் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இப்போது தான் தேர்வுகளே ஆன்லைனில் எழுதும் காலம் ஆயிற்றே .
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஏ.ட்டி.எம் இல் பணம் எடுத்து பழகி விட்ட இன்றைய இளைஞர்கள் பலரும் காசோலையில் தனது கைஎழுத்தயே தவறாக போட்டு விட்டு வங்கியில் சென்று வழிவதை பார்க்கலாம். 150 ஐ 60 ஐயும் பெருக்க இன்று கால்குலேடோர் வேண்டும். கணினி முன்பும் தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து விளையாட மறந்து விட்டார்கள் இன்றைய குழந்தைகள். இன்னும் என்ன என்ன மறக்க போகிறார்களோ ? . காலம் தான் பதில் சொல்லும்.