Friday, September 17, 2010

தமிழில் எண்கள் குறித்த சொற்கள்

நம்மில் பெரும்பாலோருக்கு எண்களை குறிக்கும் தமிழ் சொற்களில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம்,லக்ஷம்,கோடி வரை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்க்கு மேல் உள்ள எண்களை குறிக்கும் சொற்களும் தமிழில் உள்ளது. அது தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


100000000 = அற்புதம் (அதாவது நூறு மில்லியனை குறிக்கும் சொல்)

1000000000 =நிகற்புதம் ( ஒரு பில்லியனை குறிக்கும் சொல்)

10000000000 =கும்பம் ( பத்து பில்லியனை குறிக்கும் சொல் )

100000000000 = கணம் (நூறு பில்லியனை குறிக்கும் சொல் )

1000000000000 = கற்பம் (ஒரு திரில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000 = நிகற்பம் ( பத்து திரில்ல்யனை குறிக்கும் சொல் )

100000000000000 =பதுமம் (நூறு திரில்ல்லியனை குறிக்கும் சொல் )

1000000000000000 = சங்கம் ( ஒரு ஜில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000000 = வெள்ளம் (பத்து ஜில்லியனை குறிக்கும் சொல் )

100000000000000000 = அன்னியம் (நூறு ஜில்லியனை குறிக்கும் சொல்)

1000000000000000000 = அர்த்தம் ( இதற்க்கு மேல் அங்கில எண்ணிக்கை தெரியவில்லை .தெரிந்தவர்கள் சொல்லலாம் )

10000000000000000000 = பரார்ட்டம்

100000000000000000000 = பூரியம்

1000000000000000000000= முக்கோடி

10000000000000000000000 = மகாயோகம்

( எங்கோ படித்தது )

Thursday, September 16, 2010

உங்களுக்கு தெரியுமா ? பகுதி -7

1 . யானையின் பல் 9 பவுண்டு வரை எடை இருக்குமாம்

2. கண்ணை மூடாமல் தும்மல் போட முடியாது

3. நீல கண்கள் உடையவர்களால் இருளில் நன்றாக பார்க்க இயலும்

4. சில சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 முறை உடல் உறவு கொள்ளுமாம்

5. தரை வாழ் மிருகங்களிலே மிகவும் வேகமாக ஓட கூடியது சிறுத்தை தான் .2 நொடிகளில் 0 முதல் 70 கி.மீ வேகத்தை எட்டமுடியுமாம்

6. electric eel என்ற வகை மீன்களின் வாலில் 12 பல்புகள் எரிய கூடிய அளவுக்கு மின்சாரம் இருக்குமாம் .இந்த மின்சாரம் தாக்கினால் மனிதர்கள் இறக்க கூடும்

7. உலகிலயே அதிக சத்தம் எழுப்ப கூடிய விலங்கினம் Blue whale என்பது . 188 டெசிபல் அளவுக்கு இதனால் சத்தம் எழுப்ப முடியும்.

8. நத்தைகளால் 3 ஆண்டுகள் வரை உணவு உண்ணாமல் வாழமுடியும்

9. 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு பல்லுடன் பிறப்பதுண்டு

10. ஒரு ரத்த cell ஒரு மனிதனின் உடல் முழுவதும் ஒரு முறை சுற்றி வர 60 நொடிகள் ஆகும்

Sunday, September 12, 2010

விரல் நுனியில் மதுரை

Madurai at Fingertips என்பது மதுரை பற்றி இணையத்தில் வந்துள்ள ஒரு புதிய தளம்.சற்று வித்தியாசமான தளமாக உள்ளது.மதுரை குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இந்த தளத்தில் உள்ளது. இது வரை பலருக்கும் அறியாத பல புதிய தகவல்களும் இந்த தளத்தில் உள்ளது.தலைப்பில் மட்டும் தமிழையும் சேர்த்துள்ளது தான் சற்று நெருடலாக உள்ளது.ஒரு சில பக்கங்களையாவது தமிழில் சேர்த்திருக்கலாம்.இந்த தளத்தில் பல பயனுள்ள இணைப்பு பக்கங்களும் உள்ளது.உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்து தளத்தை உருவாகியிருப்பது தான் இந்த தளத்தின் தனி சிறப்பு.http://www.maduraiatfingertips.com/

Thursday, September 2, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 6

1.கேட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன் மட்டுமே

2.எவ்வளவு பெரிய வைரக்கல் ஆக இருந்தாலும் அதன் பரமாணு அல்லது மூலக்கூறு என்பது ஓன்று ஆக மட்டுமே இருக்கும்

3.நாய்கள் அவைகளுக்கு தேவையான விட்டமின் சி சத்தை அவைகளே தயார் செய்து கொள்கிறது.

4.பூனைகளால் நூறு விதமான ஒலிகளை எழுப்ப முடியும்.ஆனால் நாய்களால் வெறும் பத்து விதமான ஒலிகளையே எழுப்ப முடியும்

5.உலகின் முதல் பல்கலைகழகம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளந்தா பலகலைகழகம் தான்

6.உலகிலயே இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள மிக பழமையான அணைக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள கரிகாலன் கட்டிய கல்லணை தான்

7.உலகிலயே அதிக அளவில் பள்ளி வாசல் உள்ள நாடு இந்தியா தான் சுமார் 300000 பள்ளி வாசல்கள் இந்தியாவில் உள்ளது.

8.உலகிலயே அதிகமான நபர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான்.

9.பட்டம்பூசிகளுக்கு முதன் முதலில் இருந்த ஆங்கில பெயர் என்ன தெரியுமா ! flutterby என்பது தான்

10.வாத்து எழுப்பும் " குவாக் " என்ற ஒலிக்கு எதிரொலி வருவதில்லை .ஏன் என்று இது நாள் வரை யாராலும் கணிக்க முடியவில்லை