Tuesday, May 5, 2009
மம்மூட்டிக்கு ஏற்பட்ட அனுபவம்
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி ஏப்ரில் மாதம் 29 ஆம் தேதி, சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். அவரது நண்பர் ஸ்டான்லி களத்தர நியூயார்க் நகர் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்காக பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பேசுவதற்கு தான் சென்றார்.நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டியை 2 மணிநேரம் விமான நிலைய அதிகாரிகள் தடை செய்து விசாரணைக்காக வைத்திருந்தார்கள்.பின்பு இந்திய தூதரக அதிகாரிகள் வந்து தான் அவரை விடுவித்தனர்.எதற்கு என்று தெரியுமா?.பாஸ்போர்ட்டில் இருந்த மம்மூட்டியின் உண்மையான பெயர் தான் இத்தனைக்கும் காரணம்.அவரது பெயர் முஹம்மதுகுட்டி இஸ்மாயில் பனபரம்பில். முஹம்மது இஸ்மாயில் என்ற பெயருள்ள எந்த நபரும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் விமான நிலையத்தில் இருந்து அவ்வளவ்வு எளிதில் தப்பிவிட முடியாது.இது ஏன் என்று இந்த இரண்டு நாடுகளும் இது நாள் வரை எந்த விதமான விளக்கமும் அளித்ததில்லை.அமேரிக்காவில் உள்ள ஹோம் லாண்டு செக்யூரிட்டி அமைப்பு தான் மம்மூட்டியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக பிடித்ததாக அறிவித்தார்கள். பிரபலங்களுக்கு இது போன்ற சிக்கல்கள் இனி மேல நடக்காமல் இருப்பதற்கு இந்திய தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேசியுள்ளார்கள் என்று பின்பு தெரிவிக்கப்பட்டது.நம்ம ஊரில் பிரபலங்களுக்கு சட்டம் பொருந்தாது.சட்டம் பொது மக்களுக்கு மட்டும் தான்.அதே போல அமெரிக்காவும் செய்யும் என்று எதிர்பார்க்கிறது போலும் இந்திய தூதரகம்.
Subscribe to:
Comments (Atom)
